சூப்

1. சிக்கன் சூப்


தேவையானவை:

வெங்காயம் - பாதி
தக்காளி - பாதி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - ஒன்று
கோழி துண்டுகள்(எலும்புடன்) - 4
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள்தூள் - ஒரு பின்ச்
உப்பு - தேவையான அளவு
சீரகம், மிளகு - சிறிதளவு


வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு தாளிக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.

அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றவும். பின்னர் மூடி வைத்து 2 விசில் வரும் வரை வேக விடவும்.

சிக்கன் வெந்ததும் திறந்து சுப்பை வடிக்கட்டவும்.

சுவையான சிக்கன் சூப் ரெடி. சிக்கன் சூப்பை 8 மாதம் முதல் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சளி இருமல் சமயத்திலும் கொடுக்கலாம். பெரியவர்களுக்கு இன்னும் அதிகமாக மிளகு தூள் சேர்த்தும் கொடுக்கவும். சிக்கனுக்கு பதிலாக மட்டன் எலும்புடன் அல்லது ஈரலிலும் இந்த சூப் செய்யலாம்.



2. பாதாம் சூப்



தேவையானவை:

பாதாம் - 20
உருளை - 1
டர்னிப் (அ) நூல்கோல் - 1/4 கப் (நறுக்கியது)
வெண்ணை - 1 ஸ்பூன்
பால் - 1/2 கப்
பச்சை மிளகாய் – 1
சர்கரை - 2 டி ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு பொடி - தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப


பாதாமை அரை மணி நேரம் வெந்நீரில் ஊரவைத்து, தோலை உரித்து, மிருதுவாக அரைக்கவும்.
காய்கறிகளை தோலுரித்து அரிந்து வைக்கவும்.
குக்கரில் வெண்ணெயை போட்டு காய்கறிகளை போட்டு, நிரம் மாறாமல் வதக்கவும்.
அதனுடன் பாலையும், ஒருக்கப் தண்ணீரையும் சேர்த்து, அதனுடன் பச்சை மிளகாய் போட்டு, ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
ஆறியவுடன் பச்சைமிளகாயை எடுத்துவிட்டு, காய்கறிகளை அரைத்து வடிகட்டிவைக்கவும்.
இதனுடன் அரைத்த பாதாம் விழுது, உப்பு, சர்கரையை சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிவந்தவுடன், தீயை குறைக்கவும்.
சோள மாவை அரைக்கப் தண்ணீரில் கரைத்து, கொதித்துக்கொண்டிருக்கும் சூப்பில் சேர்க்கவும்.
மிளகு தூளை பரிமாறும்போது சேர்க்கவும்.



3.ஹெல்தி சூப்


தேவையானவை:



காலிப்ளவர் இலை மற்றும் தண்டு (வேண்டாம் என்று போடுவது)
பூசணி, சுரைக்காய், தர்பூசணி தோல் (வேண்டாம் என்று போடுவது)
முட்டைக்கோஸ் - 3 இலை
காரட் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
உருளைக்கிழங்கு - பாதி
பச்சை மிளகாய் - பாதி
மிளகு - கால் தேக்கரண்டி
வெண்ணெய் - அலங்கரிக்க

காய்கறிகள் அனைத்தையும் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வெண்ணெய் தவிர எல்லா காய்கறிகளையும் குக்கரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் வைத்து ஒரு விசில் அல்லது 10 நிமிடம் வரை வேக வைக்கவும்.

வெந்ததும் வெளியில் எடுத்து நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

அரைத்த கலவையை சல்லடையால் வடிகட்டிக் கொள்ளவும்.

தேவைக்கேற்ப கொதிநீர் சேர்த்து, வெண்ணெயை மேலே மிதக்கவிட்டு பரிமாறவும். தண்ணீர் சூப் வேண்டுமென்றால் மிக்ஸியில் அரைக்காமல் வடிகட்டி வெண்ணெய் மிதக்க விட்டு பரிமாறவும். நார்சத்து அதிகமான சத்தான சூப் ரெடி.



4. ஸ்பினாச் சூப்





இது எட்டு மாத குழந்தை முதல் வயதானவர்கள் வரை குடிக்கலாம்.
செய்வது ரொம்ப சுலபம்.
ஹெல்தியான சூப் ரிச் அயர்ன்



ஸ்பினாச் கீரை (பால்க்) = ஒரு கட்டு
மைதா = ஐம்பது கிராம்
பட்டர் = 50 கிராம்
பெப்பர், சால்ட் = தேவைக்கு
வெங்காயம் = அரை





வெங்காயம், பாலாக் இரண்டையும் குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு பின்ச் பெப்பர் சால்ட் சேர்த்து வேக விடவும்.

வெந்ததை ஆறியதும் பிலெண்டரில் (அ) மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

பட்டரை உருக்கி அதில் மைதாவை தூவி வருத்து அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க விட்டு மீண்டும் தேவைக்கு பெப்பர் சால்ட் தூவி சூடாக குடிக்க்லாம்.




5. ஸ்விட் கார்ன் சிக்கன் சூப் 




















தேவையான பொருட்கள் 
சிக்கன் = நான்கு பெரிய துண்டு எலும்புடன் 
மேகி சிக்கன் கியுப் ‍= ஒன்றில் பாதி 
கீரீம் ஆஃப் சிக்கன் சூப் பவுடர் = ஒரு பாக்கெட் 
கீரீம் ஆஃப் ஸ்வீட் கார்ன் - ஒரு டின் 
பட்டர் ‍ ஒரு = மேசைக்கரண்டி 
கார்ன் பிளார் பவுடர் ‍ ஒரு குழி கரண்டி 
உப்பு - தேவைக்கு 
சோயா சாஸ் ‍= ஒரு தேக்கரண்டி 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி 
கருப்பு மிளகு தூள் ‍ = ஒரு தேக்கரண்டி 
வெள்ளை மிளகு தூள் ‍= ஒரு தேக்கரண்டி 
முட்டை = ஒன்று 


செய்முறை 


1. முதலில் சிக்கனில் மேகி கியுப்,உப்பு ஒரு தேக்கரண்டி, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோயா சாஸ் சிறிது, போட்டு நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.


2. வெந்ததும் வடிகட்டி சிக்கன் துண்டுகளை எலும்பில்லாமல் பிரித்தெடுக்கவும். சிக்கன் வடிகட்டிய தண்ணீரை கொதிக்க விடவும்.


3. தனியாக சிக்கன் சூப் பாக்கெட்டை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து கொதித்துக்கொண்டிருக்கும் சிக்க்ன் தண்ணீரில் ஊற்றவும்.


4. பிறகு கார்ன் டின்னை ஊற்றவும்.


5. பிறகு பிரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை உதிர்த்து போட்டு மீண்டும் கொதிக்கவிடவும்.


6. பிறகு கார்ன் பிளார் மாவை கால் டம்ளர் கரைத்து ஊற்றவும்.


7. கடைசியில் ஒரு முட்டையை நுரை பொங்க அடித்து ஒரு கையால் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கொண்டே கிளறவும். கிளறி அடுப்பை அனைக்கவும்.


8. அனைத்து விட்டு உப்பு , ஒரு தேக்கரண்டி பெப்பர் தூள்,ஒரு டிராப் சோயாசாஸ் , ஒரு மேசைகரண்டி பட்டர் ஊற்றி இரக்கவும்.


9. உப்பு மிள‌கு தூள் இன்னும் தேவைப்ப‌ட்டால் குடிக்கும் போது சேர்த்து கொள்ள‌லாம். 













குறிப்பு:




இதற்கு கட்லட் சூப்பர் காம்பினேஷன். மற்றபடி சிக்கன் பஜ்ஜி, பகோடா,பஜ்ஜி, வடை, சிக்கன் போன்டா வும் செய்யலாம் ரொம்ப கட்டியாகி விட்டால் பார்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பார்டிகளுக்கு செய்யலாம். நோன்பு காலங்களில் தினம் கஞ்சி குடிப்பதற்கு பதில் இதை செய்து குடிக்கலாம். குளிர் காலங்களில் அடிக்கடி சளி பிடிக்கும் அதற்கும் இது ரொம்ப நல்லது.இதை வீட்டில் உள்ள‌ பொருட்க‌ளை வைத்து எளிதாக‌ வேறு முறையில் த‌யாரிக்க‌லாம்.




6. வெள்ளை வாயு கஞ்சி






வெள்ளை நோன்பு கஞ்சியும், பொட்டு கடலை துவையலும்..


இது இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு காலத்தில் செய்யும் பல வகை கஞ்சியில் இதுவும் ஒரு வகையாகும்.
இது வெள்ளை தேங்காய் பால் கஞ்சி, அல்சர் உள்ளவர்களுக்கு, ஜுரம் வந்தவர்களுக்கும் கொடுக்கலாம்.


தேவையான‌ பொருட்க‌ள்




வேக‌வைக்க‌


ர‌வை போல் பொடித்த‌ அரிசி (நொய்) = அரை ட‌ம்ளர்
வ‌ருத்த‌ பாசி ப‌ருப்பு = ஒரு மேசை க‌ர‌ண்டி
மிள‌கு = 7
சீர‌க‌ம் = ஒரு தேக்க‌ர‌ண்டி
பூண்டு = ஐந்து பல்
உப்பு = ருசிக்கு தேவையான‌ அளவு
வெந்தயம் = நான்கு


தாளிக்க‌

எண்ணை = ஒரு தேக்க‌ர‌ண்டி
நெய் = ஒரு தேக்க‌ர‌ண்டி
ப‌ட்டை = ஒரு சிறிய‌ துண்டு
சின்ன‌ வெங்காய‌ம் = நான்கு (பொடியாக அரிந்த‌து)
இஞ்சி பூண்டு பேஸ்ட் = அரை தேக்க‌ர‌ண்டி
கொத்து ம‌ல்லி த‌ழை = சிறிது
தேங்காய் பால் = அரை ட‌ம்ள‌ர்


செய்முறை


1. அரிசி நொயையும் ,வெந்தயம், பாசி ப‌ருப்பையும் க‌ளைந்து அரை ம‌ணி நேர‌ம் ஊற‌வைக்க‌வும்.
2. அதில் பூண்டு, மிள‌கு, சீர‌க‌ம்,உப்பு சேர்த்து முன்று ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் சேர்த்து ந‌ன்கு வேக‌ விட‌வும். குக்க‌ரில் வேக‌வைக்கும் போது தீயின் அன‌லை குறைத்து வைக்க‌வும்.இல்லை என்றால் விசில் வ‌ரும் போது தெரிக்கும்.இது இர‌ண்டு முன்று விசிலில் வெந்து விடும்.
3. சூடாக‌ இருக்கும் போதே ச‌ற்று கிள‌றி விட்டு, ரொம்ப‌ க‌ட்டியாக‌ இருந்தால் சிறிது த‌ண்ணீர் சேர்த்து கொதிக்க‌ விட‌வும்.
4. தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை முத‌லில் த‌னியாக‌ ஒரு சிறிய‌ தாளிக்கும் ச‌ட்டியில் எண்ணை + நெய் ஊற்றி ப‌ட்டையை போட்டு வெடிக்க‌ விட்டு சின்ன‌வெங்காய‌ம் சேர்த்து வ‌த‌க்க‌வும்.
5. அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி கொத்தும‌ல்லி த‌ழையும் தேங்காய் பாலும் சேர்த்து வெந்து வைத்துள்ள‌ க‌ஞ்சியில் சேர்த்து கொதிக்க‌ விட்டு இர‌க‌க்வும்.


இத‌ற்கு தொட்டு கொள்ள‌ பொட்டுக‌ட‌லை துவைய‌ல் ரொம்ப‌ ந‌ல்ல‌ இருக்கும். (அ) புதினா துவைய‌லும் தொட்டு சாப்பிட‌லாம்.


பொட்டு க‌ட‌லை துவைய‌ல்

தேவையான பொருட்கள்


பொட்டு க‌ட‌லை = கைக்கு ஒரு கை பிடி
தேங்காய் ப‌த்தை = இர‌ண்டு
ப‌ச்ச‌மிள‌காய் = ஒன்று
இஞ்சி சிறிய‌ துண்டு
வெங்காய‌ம் = கால் துண்டு
உப்பு = ருசிக்கு தேவையான‌ அள‌வு


செய்முறை


1.முத‌லில் தேங்காய் ப‌த்தை + ப‌ச்ச‌மிள‌காய் பொட்டு க‌ட‌லையை சேர்த்து அரைக்க‌வும்.
2. பாதி அரைந்த‌தும் இஞ்சி + வெங்காயம் + உப்பு சேர்த்து அரைத்து எடுக்க‌வும்.


குறிப்பு:
நோன்பு கால‌த்தில் வெள்ளை க‌ஞ்சி , ம‌சால் வ‌டை, பொட்டு க‌ட‌லை துவைய‌ல் தொட்டு சாப்பிட‌ இத‌மாக‌ இருக்கும்.
இது நோன்பு கால‌த்தில் இஸ்லாமிய‌ இல்ல‌ங்க‌ளில் செய்யும் ப‌ல‌ வ‌கை க‌ஞ்சியில் இதுவும் ஒரு வ‌கையாகும்.
இது வாயு தொல்லை, கேஸ் பிராப்ள‌ம் உள்ள‌வ‌ர்க‌ள்,வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கு கார‌ம் இல்லாம‌ல் சாப்பிட‌ கொடுக்கும் ஒரு ச‌த்தான‌ ஆகார‌ம், இதை பிர‌வுன் கோதுமை ப‌ர்க‌லிலும் செய்ய‌லாம்.