Tuesday, 24 May 2011



8. கேசரி லட்டு - kesari laddu




தேவையான பொருட்கள்
ரவை = ஒரு கப்
பட்டர் = கால் கப்
சர்க்கரை = ஒரு கப்
நெய் = இரண்டு தேக்கரண்டி
பாதம், முந்திரி = ஐந்து
கிஸ்மிஸ் பழம் = ஆறு
ரெட் கலர் பொடி = இரண்டு பின்ச்


செய்முறை

1. நெயில் பாதம் ,முந்திரி பொடியாக அரிந்து,கிஸ்மிஸ் சேர்த்து கருகாமல் வறுத்து தனியாக வைக்கவும்.பட்டரை உருக்கி அதில் ரவையை போட்டு லேசான பொன்னிறமாக வறுக்கவும்.

2. அதற்குள் பக்கத்து அடுப்பில் ரவை ஒரு கப்பிற்கு இரண்டு கப் அளவு தண்ணீர் எடுத்து அதில் கலர் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

3. கொதித்ததும் வறுத்து கொண்டிருக்கும் ரவையில் கொட்டி கை விடாமல், கட்டி தட்டாமல் ஊற்றி கிளறவும்.

4. ரவை சிறிது கெட்டியாகி வரும் போது சர்க்கரை கொட்டி கிளறி, வறுத்த முந்திரி,பாதம்,கிஸ்மிஸ் ஐ கலந்து இரக்கவும்.



ஆறியதும் அதை உருண்டைகளாக பிடித்தோ (அ) டைமண்ட் ஷேப்பிலோ கட் பண்ணவும்.

குறிப்பு

இப்படி செய்வதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.முந்திரி பாதத்தை பொடித்தும் போட்டு உருண்டைகளாக பிடிக்கலாம்.


I am sending these recipes to nithu's kitchen celebrate Sweet laddu event




இன்று என் அம்மாவின் பிறந்த நாள், துஆ செய்யுங்கள். அருமையான சுவையான என் சமையலை உலகமே சுவைத்து கொண்டிருக்கும் அட்டகாசமான சமையலை சொல்லி தந்த தாயிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உஙக்ள் எல்லோரின் வாழ்த்தும் என் அம்மாவுக்கே.
( யாராவது எங்க வீட்டுக்குவருவதாக இருந்தால் அங்கு சூப்பராக இஞ்சி சாயா கிடைக்கும் அங்கேயே போய் குடித்து கொள்ளலாம் என்று வருவார்கள்.

கூடையில் பழங்கள் கொண்டு வந்து விற்கும் பழக்காரர் , அந்த கூடைய இரக்கி வைத்ததும் அவர் முதலில் செம்பு நிறைய தண்ணீர கொடுத்துட்டுதான் பழமே வாங்குவார்கள்.
வீட்டு வேலக்காரி வந்தாலும் முதலில் அவளுக்கு டீ குடிக்க சொல்லிட்டு தான் வேலையே பார்க்க சொல்லுவாங்க./

அத ஏன் கேட்குறீங்க 20 வருடம் முன் மாப்பிள்ளைய ஏற்போட்டில் வரவேற்க வரும் போது கூட பிளாஸ் ஃபுல்லா இஞ்சி டீ தான் , ஹஸ் சந்தடி சாக்குல இந்த இஞ்சி டீ கொடுத்தே மயக்கிட்டாங்க என்பார். அம்மா ஹரீரா பால் நல்ல செய்வாங்க அதை தான் கொடுக்கலாம் என்று இருந்தேன் , போட்டோ எடுக்கல.

No comments:

Post a Comment